Saturday, February 7, 2015

சங்கம்4 : ஏன் இந்தப் பெயர் சூடல்?

கருத்துப் பொருளில் சூல் கொண்டு சொற்களை பிறப்பித்த ஒரே மொழி நானறிய தமிழ் மொழி மட்டும் தான்.

    முதல், இடை, கடை என மூன்று சங்கங்களை வரலாற்றில் தமிழர்கள் அமைத்ததை நாம் அறிவோம். இவை எதோ சில நாட்கள், வாரங்கள் அல்லது மாதங்கள் நடந்த ஓன்றுகூடல்களும் மாநாடுகளும் அல்ல. இவை குறிப்பது ஒரு தமிழ் மறுமலர்ச்சிக் காலவெளி என்பதே எனது புரிதல்.

     தமிழ் மொழியும், தமிழர் கலை-கல்வி-பண்பாட்டு வெளியும், சமூக-அரசியல்-பொருளியல்-சூழல் இருப்பும் இன்று தேய் நிலைக்கும் நெருக்கடியில் உள்ளாகியிருப்பதாக உணரப் படுகிறது. அது உண்மை தான். ஆயினும் முற்றாக அவநம்பிக்கையில் வீழும் அவசியமில்லையென்றே கருதுகிறேன். இப்போதைவிடவும் மிகப்பெரிய நெருக்கடிகளை தமிழ் சந்தித்திருக்கிறது; தமிழர் சந்தித்துள்ளனர்.ஆனால் இன்று நமக்குத் தேவைபடுவது மறுமலர்ச்சி . மீதமிருக்கும் வீரியமுள்ள விதை நெல்களை மீண்டும் விளைநிலங்களில் தூவுவது.

       சங்கம்4 மிக நீண்டதோர் காலக் கட்டத்திற்கான சிறிய தொடக்கம். பிற நகரங்கள், சிற்றூர்கள் வரை தீயாகப் பரவ வேண்டும். பல்துறை அறிவினை அனுபவங்களை உள்வாங்கி தமிழ் ஆனந்தக் களிநடனம் புரியவேண்டியதோர் காலத்திற்கான பள்ளியெழுச்சி முழங்குவதாலேயே சங்கம்4 எனப் பெயரிட்டுள்ளோம்.

    எம்முடன் இணைந்து தமிழுக்கான பள்ளியெழிச்சி பாட சங்கம்4-ற்கு வருவீர் அன்புத் தமிழர்காள்!

No comments:

Post a Comment