மூன்று கடல்...
குறிஞ்சி முல்லை, மருதம், நெய்தல் என
நான்கு திணை.....
தொல்காப்புகள் தொல்காப்பியன் தொழுத அதன் கோட்டு ஆசான்
தமிழ் அறம் வளர்த்த ஔவையார் அம்மை
ஆதி தமிழன் கடந்த பறுளி ஆறும், ஞான முனிகள் அமர்ந்த மருந்துவாழ் மலையும்
தமிழ் நிலத்தில் தொடங்கும் ஒரே நதியாம் மேற்கு தாமரபரணியும் நடந்த நிலம் எங்கள் நிலம்
எங்கள் குமரி கன்னியாகுமரி.....எங்கள் குமரி கன்னியாகுமரி.....
எங்கள் குமரி கன்னியாகுமரி.....எங்கள் குமரி கன்னியாகுமரி.....
அருள் நெறி நின்ற அன்புதுறவிகள் வந்த நிலமிது
உயிரின் சூட்சுமம் அறிந்த ஆசான்மார்கள் வாழ்ந்த நிலமிது
மலையும், அலையும், கடலும் வனமும் வயலும் வகைவகையாய் காய்கனிகளும்
வேரும் திணையும் தென்னை பனையும் அருவி குளமும் இசை பாடித்திரியும் பறவை இனங்களும்
திசை எங்கும் இனிமைகளாய் அழகான சிறிய உலகம்
எங்கள் குமரி கன்னியாகுமரி.....எங்கள் குமரி கன்னியாகுமரி.....
எங்கள் குமரி கன்னியாகுமரி.....எங்கள் குமரி கன்னியாகுமரி.....
தத்தித்தரிகிட தத்தோம் தத்தோம் தத்தையத்தோம்... தத்தித்தரிகிட தத்தோம் தத்தோம் தத்தையத்தோம்..
தித்தித்தரிகிட தத்தோம் தத்தோம் தத்தையத்தோம்... தித்தித்தரிகிட தத்தோம் தத்தோம் தத்தையத்தோம்..
பனைமரங்கள் கொண்டு நாவாய் கட்டி திரைகடல் ஓடி திரவியம் தேடி வாழ்க்கை நெய்தோம்
ஊர்கள் தோறும் பள்ளி சாலைகள் செய்து - அறிவு ஒளியால் அணி செய்தோம்
சாதி என்ற கொடுமையின் கொடுக்குடைத்தோம்...
தமிழ் எங்கள் தாய்...... தமிழ் நாடெங்கள் தாயகம்...
என்று முழங்கி உயிரீகங்கள் செய்து தமிழ் உலகு சேர்ந்தோம்....
எங்கள் குமரி கன்னியாகுமரி.....எங்கள் குமரி கன்னியாகுமரி.....
எங்கள் குமரி கன்னியாகுமரி.....எங்கள் குமரி கன்னியாகுமரி.....
எங்கள் குமரியில் திரும்பும் திசை எங்கும் இளந்தென்றல் காற்று உண்டு
தோண்டும் நிலமெங்கும் நல் ஊற்றுகள் உண்டு
சாதி மதம் என்று பிரிந்தாலும் எல்லோர் நெஞ்சிலும் நேசத்தின் ஈரம் உண்டு
அந்த நேசத்தை நம்பி கரம் கோர்த்து நின்று கனவொன்று வளர்க்கிறோம்
எங்கள் குமரி... இந்த உலகம் போற்ற எழுக....
என்று முழங்கிடும் எங்களின் சங்கமம்
குமரியின் சங்கமம் வரலாற்று சங்கமம்
கன்னியாகுமரியின் சங்கமம்
எங்கள் குமரி கன்னியாகுமரி.....எங்கள் குமரி கன்னியாகுமரி.....
எங்கள் குமரி கன்னியாகுமரி.....எங்கள் குமரி கன்னியாகுமரி.....
குறிஞ்சி முல்லை, மருதம், நெய்தல் என
நான்கு திணை.....
தொல்காப்புகள் தொல்காப்பியன் தொழுத அதன் கோட்டு ஆசான்
தமிழ் அறம் வளர்த்த ஔவையார் அம்மை
ஆதி தமிழன் கடந்த பறுளி ஆறும், ஞான முனிகள் அமர்ந்த மருந்துவாழ் மலையும்
தமிழ் நிலத்தில் தொடங்கும் ஒரே நதியாம் மேற்கு தாமரபரணியும் நடந்த நிலம் எங்கள் நிலம்
எங்கள் குமரி கன்னியாகுமரி.....எங்கள் குமரி கன்னியாகுமரி.....
எங்கள் குமரி கன்னியாகுமரி.....எங்கள் குமரி கன்னியாகுமரி.....
அருள் நெறி நின்ற அன்புதுறவிகள் வந்த நிலமிது
உயிரின் சூட்சுமம் அறிந்த ஆசான்மார்கள் வாழ்ந்த நிலமிது
மலையும், அலையும், கடலும் வனமும் வயலும் வகைவகையாய் காய்கனிகளும்
வேரும் திணையும் தென்னை பனையும் அருவி குளமும் இசை பாடித்திரியும் பறவை இனங்களும்
திசை எங்கும் இனிமைகளாய் அழகான சிறிய உலகம்
எங்கள் குமரி கன்னியாகுமரி.....எங்கள் குமரி கன்னியாகுமரி.....
எங்கள் குமரி கன்னியாகுமரி.....எங்கள் குமரி கன்னியாகுமரி.....
தத்தித்தரிகிட தத்தோம் தத்தோம் தத்தையத்தோம்... தத்தித்தரிகிட தத்தோம் தத்தோம் தத்தையத்தோம்..
தித்தித்தரிகிட தத்தோம் தத்தோம் தத்தையத்தோம்... தித்தித்தரிகிட தத்தோம் தத்தோம் தத்தையத்தோம்..
பனைமரங்கள் கொண்டு நாவாய் கட்டி திரைகடல் ஓடி திரவியம் தேடி வாழ்க்கை நெய்தோம்
ஊர்கள் தோறும் பள்ளி சாலைகள் செய்து - அறிவு ஒளியால் அணி செய்தோம்
சாதி என்ற கொடுமையின் கொடுக்குடைத்தோம்...
தமிழ் எங்கள் தாய்...... தமிழ் நாடெங்கள் தாயகம்...
என்று முழங்கி உயிரீகங்கள் செய்து தமிழ் உலகு சேர்ந்தோம்....
எங்கள் குமரி கன்னியாகுமரி.....எங்கள் குமரி கன்னியாகுமரி.....
எங்கள் குமரி கன்னியாகுமரி.....எங்கள் குமரி கன்னியாகுமரி.....
எங்கள் குமரியில் திரும்பும் திசை எங்கும் இளந்தென்றல் காற்று உண்டு
தோண்டும் நிலமெங்கும் நல் ஊற்றுகள் உண்டு
சாதி மதம் என்று பிரிந்தாலும் எல்லோர் நெஞ்சிலும் நேசத்தின் ஈரம் உண்டு
அந்த நேசத்தை நம்பி கரம் கோர்த்து நின்று கனவொன்று வளர்க்கிறோம்
எங்கள் குமரி... இந்த உலகம் போற்ற எழுக....
என்று முழங்கிடும் எங்களின் சங்கமம்
குமரியின் சங்கமம் வரலாற்று சங்கமம்
கன்னியாகுமரியின் சங்கமம்
எங்கள் குமரி கன்னியாகுமரி.....எங்கள் குமரி கன்னியாகுமரி.....
எங்கள் குமரி கன்னியாகுமரி.....எங்கள் குமரி கன்னியாகுமரி.....
No comments:
Post a Comment